Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் தொடங்கியது லைகா-சூர்யா படத்தின் பூஜை

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (21:30 IST)
'கத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம் இன்று கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறது.
 
இந்த நிலையில் சூர்யாவின் 37வது படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று லண்டனில் நடந்தது. இந்த பூஜையில் சூர்யா, சாயிஷா, கே.வி.ஆனந்த் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கவுள்ளது. இந்த படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொமன் இரானி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பதும் இந்த படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments