Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷை தொடர்ந்து சூர்யா? மாரி செல்வராஜ் அடுத்த பளான் !

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (12:17 IST)
சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 
சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments