Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 16 June 2025
webdunia

ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது - பிரபல இயக்குநர்

Advertiesment
வெளிச்சக்கீற்று
, செவ்வாய், 19 மே 2020 (21:12 IST)
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்னதி,ராதிகா,. யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜெயில் . இப்படத்திற்காக அனைத்து ஹுட்டிங்கும், போஸ்ட் புரொடெக்சன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயால் நிலையில் இருந்த நிலையில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா வந்த காரணத்தால் படகுழு அதிர்சசி அடைந்தது.

இந்நிலையில்,  இப்படத்தின் இயக்குநர் வசந்த பாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில், ஜெயில் என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவரஇயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது.எட்டுதிசையெங்கும் தட்டினோம்.குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைகிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.

இதற்கிடையில் கொரோனோ வேறு உலகை தன் பிடிக்குள் வைத்து கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனோ வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள்

மகிழ்ச்சியளிக்கின்றன.
வெளிச்சக்கீற்று

ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக்கீற்று தெரிகிறது.

ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது.விரைவில் ஜெயிலைப்பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளை திறக்கிறேன்.@gvprakshkumar  என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்... அரசை எச்சரிக்கை செய்த வைரமுத்து