Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் 10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்… வடிவேலு உருக்கம்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (10:32 IST)
நடிகர் வடிவேலு சமீபத்தில் நடந்த வாட்ஸ் ஆப் குழு மீட்டிங்கில் நடிக்க முடியாமல் போனது குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளாராம்.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிக்கவில்லை. அப்படி நடித்தாலும் அவர் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படமும் பாதியிலேயே டிராப் ஆகியுள்ளது.

இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத வடிவேலு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு துறையினர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவினர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி என அது சொல்லப்படுகிறது.

அப்போது பேசிய வடிவேலு ‘நீங்கள் எல்லாம் ஒரு வருடமாகதான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன். என் உடம்பில் இப்போதும் தெம்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை.’ என பேசினாராம். அதே போல சோகத்தோடு கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments