Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்குக் கதை சொல்லிய வசந்தபாலன்… டேக் ஆஃப் ஆகுமா?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (07:50 IST)
இயக்குனர் வசந்தபாலன் சூர்யாவுக்காக ஒரு வரலாற்றுக் கதையை சொல்லியுள்ளாராம்.

ஆல்பம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். அதன் பிறகு அவர் இயக்கிய வெயில் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஆனால் அதற்குப் பின்னர் அவர் இயக்கிய அரவான் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதனால் அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவர் இப்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டு அர்ஜுன் தாஸைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் இப்போது நடிகர் சூர்யாவுக்காக ஒரு வரலாற்றுக் கதையை  சொல்லியுள்ளாராம். சூர்யாவும் கதையைக் கேட்டு பாஸிட்டிவ்வான ரியாக்‌ஷன் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா இப்போது பாண்டிராஜ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments