Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு ஏன்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (21:40 IST)
நடிகர் விஜய் இன்று 2 வது நாளாக மக்கள் இயக்க  நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தியது  பற்றி  ‘’மக்கள் இயக்கத்தின்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, பனையூரில் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் 2 வது  நாளாக சந்தித்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பின் புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின்னர்,  இன்று நடைபெற்ற மக்கள் இயக்க  நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பற்றி விஜய் ‘’மக்கள் இயக்கத்தின்  செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நேற்றும் இன்றும் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற கல்வி விழாவிற்கு எல்லோருக்கும், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நகரம்,  ஒன்றியம் கிளைமன்ற நிர்வாகிகள் அனைவர் அனைவரும்  மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை பத்திரமாக அழைத்துவந்து, அதேபோல் அவர்களை  வீட்டில் விட்டனர்.

அதன் காரணமாக்  நேற்றும்  இன்றும் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கு மதிய விருந்து கொடுத்தார். ஒவ்வொருத்தரையும் சந்தித்து நன்றி கூறியதுடன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி தளபதி  விசாரித்தார்.

இது எப்போதும் நடைபெறுவதுதான்.''  என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments