Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை வாலிபர்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (07:36 IST)
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் எதிர்பாராமல் சிக்கிய சென்னை இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். மரணம் அடைந்த சென்னை வாலிபரின் மறைவிற்கு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி அந்த  இளைஞரின் பெற்றோருக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார். 
 
சென்னையை சேர்ந்த திருமணி என்ற இளைஞர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். அப்போது பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில், இந்தவழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த திருமணி மீது பெரிய கல் ஒன்று பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமணி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்ரி சில நிமிடங்களில் மரணம் அடைந்தார்.
 
இந்த தகவல் கேட்டு உடனடியாக திருமணியின் பெற்றோர் காஷ்மீர் சென்றனர். தமிழக இளைஞர் மரணச்செய்தி அறிந்த காஷ்மீர் முதல்வர் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து, திருமணியின் பெற்றோரிடம் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வீச்சு சம்பவம் நடந்த பகுதி இவரது தொகுதியில் அடங்கிய ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments