Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிடம் பணம் இல்லையாம்: சொல்கிறார் ஆற்காடு வீராசாமி

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:11 IST)
இந்தியாவின் பணக்கார கட்சிகளில் ஒன்று திமுக என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்களிடம் ரூ.100 கோடி பணம் இல்லை என்றும், இந்த பணம் மட்டும் தங்களிடம் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை எப்பவோ கவிழ்த்திருப்போம் என்றும் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்,.

மக்களின் விரோத அரசு அதிமுக அரசு என்று கூறும் திமுக, அந்த அரசை ஏன் கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஆற்காடு வீராசாமி, 'அதிமுகவிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நாங்கள் நினைத்திருந்தால் இந்த ஆட்சி எப்படி நீடிக்க முடியும். எங்களுக்கு பண வசதி இருந்தால் அதனை செய்து காட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

பணம் கொடுத்து ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு. தற்போதையை அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் எங்களை எங்கள் பக்கம் இழுத்தாலே போதும் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆனால் அதற்கு எங்கள் கட்சியில் பணம் இல்லை' என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments