Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி...

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:16 IST)
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க துபாய் போலீசார் அனுமதி வழங்கி விட்டனர்.

 
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி வந்தனர். அனைத்து நடைமுறைகளும் முடிந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு  ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை துபாய் போலீசார் தற்போது வழங்கியுள்ளனர். இதற்கு பின் அவரது உடல் என்பார்மிங் அதாவது பதப்படுத்துதல் செய்யப்படும். அதற்கு எப்படியும் 2 மணி நேரங்கள் ஆகும். அதற்கு பின் அவரது உடல் இன்று இரவு மும்பைக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.
 
இந்த தகவல் துபாய் இந்திய தூதகரத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவரது பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா விசா ஆகியவற்றை ரத்து செய்யும் பணியிலும் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments