Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான்: எடப்பாடி பழனிச்சாமி

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (19:44 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு, தினகரன் செய்த துரோகம், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்

தினகரன் குறித்த கேள்விக்கு, 'அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான் என்றும், அதிமுகவை உடைக்கும் பணியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவதாகவும், 18 எம்எல்ஏக்களால் தான் அவர்களின் தொகுதி முடக்கப்பட்டுள்ளதாகவும், துரோகம் செய்த காரணத்தால்தான் அவர்களுக்கு இறைவன் தக்க பாடம் புகட்டியுள்ளதாகவும் கூறினார்

அதேபோல் கூட்டணி குறித்த கேள்விக்கு, 'தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்றும், 18 தொகுதிகள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் அனைத்து திட்டப்பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து முதல்வர் கூறியபோது, ;'தமிழகத்திற்கு ஆந்திர அரசு வழங்க வேண்டிய நீர் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்கவில்லை என்றும், திமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டுமே என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments