Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச் லைட் அடித்து ஹெலிகாப்டருக்கு உதவிய பொதுமக்கள்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (07:59 IST)
தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் அங்கு டிரெக்கிங் சென்ற சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின்பேரில் நேற்று இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன

இந்த நிலையில் மாணவிகள் சிக்கியுள்ள இடம் குறித்து ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டரை பார்த்த பொதுமக்கள் உடனே தங்கள் கையில் இருந்த டார்ச்லைட் மற்றும் மொபைல்போன்களில் இருந்த டார்ச்லைட்டை அடித்து ஹெலிகாப்டரில் இருந்தவர்களுக்கு உதவினர். பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பை அடுத்த அந்த பகுதியில் இறங்கிய விமானப்படை வீரர்கள் மாணவிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments