Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு அந்த பயம் வேண்டாம்; சத்யராஜ் பதிலடி

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:57 IST)
சென்னையில் நேற்று நடிகர் சங்கத்தின் சார்பில் நடந்த அறப்போராட்டத்தில் ஆவேசமாக பேசிய சத்யராஜை மிரட்டும் தொணியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேசியது குறித்து சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தமிழிசையின் மிரட்டலுக்கு சத்யராஜ் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
 
இன்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, 'தமிழிசை என்னை பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் அரசியல் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை.
 
40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் தவறுகள் நடந்ததே இல்லை. எதிலும் நேர்மை காத்து வருகிறேன். ஐடி ரெய்டு வந்தால் எதுவும் தேறாது. ஒரு அப்பா வேடத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்து, ஒரு பெரிய தலைவர் பயப்பட வேண்டாம்' என்று கூறினார்.
 
மேலும் காவிரி பிரச்னை உள்ள சூழலில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். போராட்ட மன நிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசைதிருப்ப முயற்சி என்று சத்யராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments