Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிங்க் நிறத்தில் பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை - ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:59 IST)
வருகிற பிப்ரவரி 2ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
2018ம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 2ம் தேதி நிதியமச்சர் அருண்ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 
 
இந்நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம், நேற்று செய்தியாளர்கள் முன்னிலையில்  பொருளாதாரா ஆய்வறிக்கையை பார்வைக்கு காட்டினார்.
 
கடந்த ஒரு ஆண்டின் பொருளாதாரா ஆய்வு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், முக்கியமாக நாட்டின் மேக்ரோ பொருளாதார சூழ்நிலை குறித்த விபரங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அந்த ஆய்வறிக்கையின் அட்டை பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி விளக்கம் அளித்த சுப்பிரமணியம் பிங்க் நிறம் பெண்களை குறிப்பதால், பெண்களின் உரிமையை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பொருளாதார ஆய்வறிக்கையின் அட்டை, பிங்க் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments