Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து....12 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (21:10 IST)
பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஜாம்போங்கா நகரில் ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்   ஒன்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பொங்பொங் மார்கஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள தெற்குப்பகுதியில் மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து  சுலுமாகாணத்திலுள்ள ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்தக் கப்பலில், சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, இந்தக் கப்பல் பலுக் தீவு என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கப்பலில் திடீரென்று தீப்பிடித்தது.

உடனே கப்பலில் தீ பரவியதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி கடலில் குதித்தனர். இதுகுறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளை ஏற்றினர்.

அதன்பின்னர், கப்பலில் எரிந்த தீயு அணைக்கப்பட்டது.  இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கப்பலில் சிக்கியிருந்த 230 பேர் பத்திரமாக கரையில் சேர்க்கப்பட்டனர்.  இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments