Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

Advertiesment
நெதர்லாந்து

Mahendran

, திங்கள், 9 ஜூன் 2025 (11:43 IST)
நெதர்லாந்து மியூசியத்தில் 200 வருடங்களுக்கு முந்தைய காண்டம் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ரிக்ஸ் மியூசியத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டம் வைக்கப்பட்டுள்ளது. மாட்டின் குடல் பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த காண்டத்தில் ஒரு பெண்ணின் ஓவியமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த காண்டம் மியூசியத்தில் வைக்கப்பட்ட நாளிலிருந்து, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதை பார்ப்பதற்காக ஏராளமானோர் வந்து செல்வதாகவும், "இதைக் ஏலம் விடுவீர்களா?" என்று ஒரு சிலர் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
"இந்த காண்டம் குறித்த தகவலை நாங்கள் டிவியில் ஒளிபரப்பிய பின்னர்தான் அதிகமான அளவில் மியூசியத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்," என்றும் மியூசியம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த காண்டத்தை யாரும் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இது 1830ஆம் ஆண்டு செய்யப்பட்டதாகவும் அந்த காலத்திலேயே பாலியல் தொழில்கள் இருந்திருக்கலாம் என்றும், அதற்காக காண்டம்கள் தயாரிக்கப்பட்டதாக இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!