Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடத்தில் கொடியேற்றிய 3 மாணவர்கள், ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (09:36 IST)
பாகிஸ்தானில் பள்ளியில் கொடியேற்றிய மாணவர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பள்ளியில் காலை இறை வணக்கத்திற்காக மாணவர்கள் கொடியேற்ற சென்றுள்ளனர். அந்த கொடி கம்பத்தில் மின்சார ஒயர் ஒன்று உரசிக் கொண்டிருந்ததை கவனிக்காத மாணவர்கள் கம்பத்தின் மீது கை வைக்கவே மாணவர்கள் மூவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவரும் பலியானார்.
 
இந்த கோர சம்பவத்தையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments