Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை குண்டுவெடிப்பு: ஒரே குழுவைச் சேர்ந்த 7 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (18:30 IST)
இலங்கையில் இன்று காலை முதல் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதேபோல் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட 8 குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 8 வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தியது ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் 450 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் அனனவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments