Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப்போர் வெடிகுண்டு; மூடப்பட்ட விமான நிலையம்: லண்டனில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (15:27 IST)
எப்போதும் பரபரப்பாக இருக்கும் லண்டன் நகர விமான நிலையம் முன் அறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டது. இதற்கான காரணம் 2 ஆம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு அங்கு கண்டெடுக்கப்பட்டது. 
 
தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மர்ம பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் மேற்கொண்ட சோதனையில், அந்த மர்ம பொருள் 2 ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது தெரியவந்தது.
 
இதனால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி விமானம் புறப்பட்டுச் செல்லவும், தரையிறங்கவும் தடைவிதிக்கப்பட்டது. பயணிகல் வெளியேற்றப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து, லண்டன் மாநகர போலீஸாரின் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டை செயல் இழக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments