Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கப்படைகள் – ட்ரம்ப் டிவீட்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (09:14 IST)
சிரியாவில் ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவம் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புத் தலைதூக்க தொடங்கியது. மெல்ல மெல்ல அதிகமான அவர்களின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் சிரியாவின் ஒரு சிலப் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு இணை அரசங்கம் நடத்துமளவுக்கு முன்னேறினர். அங்குள்ள மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றனர்.

இந்த தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க சிரிய அரசு மற்றும் அந்த நாட்டு மற்றொருப் போராளிக் குழுவான குர்துப் போராளிகளோடு இணைந்து அமெரிக்க ராணுவமும் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது. சில ஆண்டுகளாக அங்கு தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க ரானுவத்துக்கும் சண்டை நடந்து வந்தது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அங்குள்ள தீவிரவாதிகளை முழுமையாக அழித்து விட்டதாகவும் அதனால் அங்குள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்ப இருக்கிறார்கள் என அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments