Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: வங்கதேசம்

Mahendran
திங்கள், 9 செப்டம்பர் 2024 (10:54 IST)
வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச அரசு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாத வன்முறை காரணமாக அதிபர் ஷேக் ஹசீனா திடீரென பதவி விலகிய நாட்டை விட்டு வெளியேறினார் என்பதும் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை அங்கிருந்து நாடு கடத்தி வங்கதேசத்திற்கு அழைத்து வந்து அவர் மீது வழக்கு தொடரப்படும் என வங்கதேச வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நாட்டுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments