Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொருளை திருடிவிட்டு ...குழந்தையை மறந்துவிட்டுச் சென்ற பெண்கள் ... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

பொருளை திருடிவிட்டு ...குழந்தையை மறந்துவிட்டுச் சென்ற பெண்கள் ... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (19:08 IST)
அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மிடில்டவுன் நகரில் குழந்தைகள் விற்பனைக் கூடம் உள்ளது. அங்கு 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணிபுரிபவரிடம் இரு பெண்கள் பேச்சுக்கொடுக்க... உடன் வந்த இன்னொரு பெண் ஒருவர் அங்கிருந்த டிராலர் ஒன்றை யாருக்கும் தெரியாமல் லவட்டிக்கொண்டு போனார்.
ஆனால் அந்த பெண் தன்னுடம் அழைத்து வந்த குழந்தையை கடையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அத பிறகு மற்ற இரு பெண்களும் குழந்தையைப் பார்க்காமல் கடையை விட்டு வெளியேறியுள்ளனர். 
 
இதையத்து சிறுதுநேரம் கழித்து டிராலியை திருடிச்சென்ற பெண், தன் குழந்தையை தேடிகொண்டு கடைக்கு வந்து குழந்தையை அழைத்துச் சென்றார். அந்தக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்ததால் அதை அக்கடையில் உரிமையாளர் இணையதளத்தில் வெளியிட்டார். தற்போது அது வைரலாகிவருகிறது. 
 
இதுகுறித்து கடை உரிமையாளர் போலிஸில் புகார் அளிக்க .. போலீஸார் விசாரணை மேற்கொண்டு 3 பேரில் இரண்டு பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து பொருட்களை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப.சிதம்பரம் குடும்பம் அறிக்கை: "பல நாடுகளில் சொத்து இருப்பதாக கூறுவது பேய்க் கதை"