Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: வௌவால், பூனைகளை சாப்பிட தடை!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:51 IST)
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பூனை போன்ற உயிரினங்களை சாப்பிட சீன அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் விலங்குகள் மூலமாகவே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் சீனா முழுவதும் வௌவால், பாம்பு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆடு, மாடு, வாத்து, கோழி, மீன் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் புதிய வைரஸ் உருவாகாமலும் தடுக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments