Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தை சீண்டிப் பார்க்கும் சீனா - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (17:08 IST)
அருணாச்சல பிரதேசத்தில் அத்து மீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்கள் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
இந்தியா - பூடான் எல்லைப் பகுதியில் டோக்லாம் பீடபூமியை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அந்த பகுதியில் சாலை அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிக்கிம் மாநிலம் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  
 
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முயற்சித்த போது இருதரப்பினருக்கு இடையே கைகலப்பானது. சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் புகுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. 
 
இந்நிலையில், கடந்த மே மாதம், அருணாச்சல பிரதேச எல்லையில், சீனா அடாவடியாக நுழைந்த சீன ராணுவ வீரர்கள் அங்கு அத்து மீறி நடந்து கொண்டனர். இந்திய எல்லையில் கற்களால் ஆன அரண்களை அமைத்து, அங்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர். அங்கு வரும் சீன வீரர்கள் அந்த கற்களை அகற்ற முயல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் ஓடும் அந்த வீடியோ பதட்டத்தை உண்டாக்குகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments