Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.7 லட்சத்துக்கு வாங்கியும் போதையே இல்லை; சீன எழுத்தாளர் வழக்கு

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (14:10 IST)
லண்டனில் ரூ.7 லட்சத்துக்கு வாங்கி மது குடித்தும் போதை இல்லை என சீன எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டல் மது வகைகளுக்கு சிறப்பு பெற்றது. இங்கு உலகிலேயே மிக அதிகமான விலை உயர்வான மதுவகைகள் கிடைக்கும். இந்த ஓட்டலில் மிக குறைந்த விலை மது வகை ரூ.2 லட்சத்துக்கு மேல்தான்.
 
இந்நிலையில் சீன எழுத்தாளர் ஒருவர் ரூ.7 லட்சத்துக்கு மது வாங்கி குடித்துள்ளார். அந்த மது 1878ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அதாவது ஆங்கிலத்தில் இதுபோன்ற மதுவகைகளை பிளண்டட் என குறிப்பிடுவர். எத்தனை ஆண்டுகள் பழமையானதோ அதற்கு ஏற்ப விலை அதிகமாகும். 
 
இந்நிலையில் அவருக்கு மது குடித்து சிறிய அளவில் கூட போதை ஏறவில்லை. எனவே மீதம் இருந்த மதுவை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அவர் குடித்தது போலியான மதுபானம் என தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து அவர் அந்த ஓட்டல் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து அந்த ஓட்டல் நிர்வாகம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments