Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நடன பெண்’ சிலை எங்களுக்குதான் சொந்தம்: பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (15:09 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை அதிகரித்து வரும் நிலையில் மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுப்படிக்கப்பட்ட நடன பெண் வெண்கலச் சிலையை இந்தியாவில் இருந்து மீட்க வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
இந்து சமவெளி நாகரிக காலம் தொடர்பான வரலாற்று ஆதாரமாக பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ பகுதியில் 1926ஆம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் பழமையான ஒரு வெண்கலச் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டது. அது நடன பெண் சிலை ஆகும்.
 
தற்போது அந்த சிலை டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் பாதுகாபில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கலை பொக்கிஷமான இந்த சிலையை இந்தியாவிடம் இருந்து மீட்டு தங்கள் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
ஐரோப்பா கண்டத்தில் வைக்கப்பட்டுள்ள லியானார்டோ டாவின்சியின் பிரபல ‘மோனாலிசா’ ஓவியத்துக்கு இணையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிலையை பாகிஸ்தானின் கலாச்சார அடையாளம் எனவும், இதை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments