Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (15:37 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்  
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிண்டானாவ் என்ற மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக  கட்டிடங்கள் குலுங்கின. ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்ததாகவும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  
 
மேலும் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து சிதறி உடைந்தன என்றும்  இந்த நிலநடுக்கம்    காரணமாக பொதுமக்கள் பெரும் பதட்டத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments