Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க கொரோனா மருந்தை ரஷ்யா திருட பாக்குறாங்க! – இங்கிலாந்து பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (09:10 IST)
இங்கிலாந்தின் கொரோனா மருந்து குறித்த ஆய்வு தகவல்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இங்கிலாந்தும் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. மேலும் இங்கிலாந்தின் மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால் விரைவில் அவை புழக்கத்திற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயல்வதாய் இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் குழப்பத்தை விளைவிக்க இங்கிலாந்து – அமெரிக்கா இடையேயான தகவல்களை திருடி வெளியிட ரஷ்யா முயற்சித்ததாக இங்கிலாந்து குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஹேக்கர்களை கொண்டு மருத்துவ தகவல்களை திருடும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து சுமத்துவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments