Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டில் திருடிய சிறுவனுக்கு தாய் கொடுத்த தண்டனை - அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (13:31 IST)
வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சீனா ஷயோடாங் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் சிறுவன் வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை திருடி செலவழித்து விட்டான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சரியான பதிலை அவன் கூறவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவனின் தாய், தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அலறியுள்ளான்.
 
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
தனது கணவரின் ஒரு மாத சம்பளத்தை தனது மகன் திருடி செலவு செய்துவிட்டதால், ஆத்திரத்தில் அப்படி செய்ததாக போலீசாரின் விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார். எனவே, அவருக்கு, அவரின் மகனுக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments