Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென முக்கிய சேவையை நிறுத்துகிறது கூகுள்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (22:44 IST)
கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வரும் நிலையில் இன்பாக்ஸ் செயலி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இன்பாக்ஸ் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் இன்பாக்ஸ் செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் ஸ்னூஸ் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், நட்ஜஸ், நோட்டிஃபிகேஷன்கள், ஜெஸ்ட்யூர் மற்றும் பன்ட்லிங் ஆகிய அம்சங்கள் இருந்ததால் பயனாளிகள் இந்த சேவையை விரும்பினர்.

ஆனால் இந்த இன்பாக்ஸ் செயலியின் சேவையை வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஜிமெயில் அம்சங்களுக்கான மேலாளர் மேத்யூ சாட் என்பவர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, '"அனைவருக்கும் சிறப்பான மின்னஞ்சல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேலும் சிறப்பான அணுகுமுறையை கையாள வேண்டும். இதனால், ஜிமெயிலில் மட்டும் அதிக கவனம் செலுத்தி, இன்பாக்ஸ் சேவையை மார்ச் 2019-க்குள் நிறுத்த இருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

இதே கூகுள் நிறுவனம் 2019 மார்ச் மாதத்துடன் ஷார்ட் யூஆர்.எல் சேவையையும் நிறுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments