Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய சிறுவர்கள்..

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (12:28 IST)
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் ஒன்றை சேதப்படுத்தியது தொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் சாக்ரோ பகுதியில் அமைந்துள்ளது மாதா தேவல் பிட்டானி என்று அழைக்கப்படும் ஹிந்து ஆலயம். இதில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக நான்கு சிறுவர்கள் கோவிலை சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 12 முதல் 15 வயதுக்குள்ளான 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது தெய்வ நிந்தனை செய்ததாக கூறி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிந்து மாகாண சிறுபான்மைத்துறை அமைச்சர் அரிராம் லால் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர், “அமைதிக்கு பெயர் போன சாக்ரோ நகரத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சமூக விரோதிகள் உள்ளனர்” என குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments