Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தடை; ஈரான் அரசு அதிரடி

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (15:19 IST)
மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்குவதை தடுக்கும் விதமாக ஈரானில் தொடக்கநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஈரான் நாட்டின் பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில் தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது. தொடக்கப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதால் குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். 

இதனால் ஈரானிய கலாசாரம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே ஈரானிய கலாசாரத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளியில் படிக்கும் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments