Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி20 மாநாட்டை புறக்கணித்த ரஷிய, சீன நாட்டு அதிபர்கள்?

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (17:15 IST)
இந்தியாவில் நடைபெறும் ஜி20  உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகிறது

ஜி20  உச்சி மாநாடு உலகில் உள்ள முக்கிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு ஆகும். இதில், 19 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்  ஒன்றுகூடி, உலகளாவிய நிதிதொடர்பான விவகாரங்கள் எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதித்து, ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பார்கள்.

இந்த முறை ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில்   நடைபெறவுள்ளது. இதில், 19 நாட்டு தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகிறது. அவருக்குப் பதில், சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

மேலும்,  உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச தடையால் ரஷிய அதிபர் புதினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவருக்குப் பதில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments