Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள், பூங்காக்கள் மூடல்!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (09:10 IST)
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளை மூட பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 2800ஐ தாண்டிவிட்ட நிலையில், தொடர்ந்து தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் ஜப்பானும் இணைந்துள்ளது. இதனால் ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் பள்ளிகளை மூட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜப்பானில் உள்ள டிஸ்னிலேண்ட் முதற்கொண்ட கேளிக்கை பூங்காக்களும் 2 வார காலத்திற்கு மூட உத்தேசித்துள்ளன. மேலும் பல உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவையும் மூட இருப்பதால் ஜப்பானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments