Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடைச்சதை அள்ளிக் கொண்டு தப்பிய கோத்தா? – விமானமா? கப்பலா?

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (11:36 IST)
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே நாட்டை விட்டு தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் எரிப்பொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில மாதங்கள் முன்னதாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌ஷே பதவியை விட்டு தப்பி ஓடினார். பின்னர் ரணில் விக்ரமசிங்கெ பிரதமராக பதவியேற்று நிலமையை சரிசெய்ய முயன்றார்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. போராட்டக்காரர்கள் வீட்டை முற்றுகையிடப்போவதாக முன்னதாக உளவுத்துறை தகவல் வந்ததால் கோத்தாபய அங்கிருந்து குடும்பத்துடன் தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விமானத்தில் தப்பி சென்றதாகவும், இலங்கையின் போர் கப்பலில் தப்பி சென்றதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் அவர் தப்பித்தபோது அவருடன் மூன்று பெரிய பெட்டிகளை எடுத்து சென்றதகாவும் அதில் என்ன இருந்தது என்ற யூகங்களும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments