Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்திற்கு எதிராக புரட்சி; துண்டிக்கப்பட்ட இணைய சேவை! – என்ன நடக்கிறது மியான்மரில்?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:27 IST)
மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் நடந்த மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ராணுவம் ஜனநாயக கட்சி முக்கிய தலைவர்களை கைது செய்துள்ளதுடன், மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ஆயுதமேந்திய போர் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலாக மியான்மரின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடந்து வரும் இந்த அதிகார மீறலான ராணுவ ஆட்சியை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா சபையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments