Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு: காரணம் என்ன??

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (11:57 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.
 
ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணை  இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில், தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் தொடர் துவங்கவுள்ளது. இதில் வடகொரியாவும் பங்கேற்கவுள்ள நிலையில், பிப். 8ஆம் தேதி பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாம். 
 
வடகொரியாவில் அதன் நிறுவனர் கிம் 2-சங் கொரில்லா படையை உருவாக்கியதன் நினைவாக ஏப்ரல் 25 ஆம் தேதி இது போன்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வந்தது. ஆனால், முதல் முறையாக வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினமான பிப். 8 அன்று ராணுவ அணிவகுப்பு நடைபெறுவது உலக நாடுகளுக்கு சந்தேகத்தையும், அச்சதையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments