Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்: பிரதமர் இம்ரான் கான் அழைப்பு

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (13:51 IST)
பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக நடிகரும் பாகிஸ்தான் முன்னார் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் ஆட்சி அமைத்துள்ளது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். 
 
இந்நிலையில், பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு...
 
இந்தியாவும், பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
 
வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு, துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச்செய்வதற்கு நமது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு, வர்த்தகத்தை தொடங்குவதுதான் சிறந்த வழி என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இதற்கு முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய முந்தைய நவாஸ் ஷெரீப் அரசால், பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments