Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் பிரதமராவதில் சிக்கல்: எதிர்கட்சிகளால் திடீர் குழப்பம்!

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (15:44 IST)
கடந்த 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 
 
ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் சார்பில் பிரதமரை தேர்ந்தெடுக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ராணுவத்தின் பலத்தால் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொம்மை அரசாங்கம் அமைவதை கடுமையாக எதிர்க்கிறோம்.  இதை கண்டித்து போராடுவோம் என எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments