Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையின் அதிபரான பிரதமர்.. பொறுப்பேற்கும் ரணில் விக்ரமசிங்கே!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (14:34 IST)
இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார்.

அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை தற்காலிக அதிபராக இலங்கை சபாநாயகர் அபேவர்தனே அறிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள கோத்தபய ரணிலை தற்காலிக அதிபராக நியமித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தற்காலிக அதிபர் பதவியை மக்கள் ஏற்பார்களா என்ற குழப்பம் நிலவி வருவதால் இலங்கையில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments