Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் போர்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு...அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு!

உக்ரைன் போர்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு...அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு!
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:22 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

உக்ரைனில் ரஸ்யா போர்தொடுத்து வரும்  நிலையில் இந்தியர்களை மீட்க புறப்பட்ட  ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது.

இந்நிலையில் உக்ரைன் வாழ் இந்தியர்கள் தலைநகர் கீன்   நோக்கி வருவதை தவிர்க்கும்படி இந்திய  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உக்ரைன் போரால் இந்தியாவில் பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணா வகையில் உயர்ந்துள்ளது.

தற்போது, அமெரிக்க டாலருக்கு   நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  கடுமையான சரிவடைந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு 109 காசுகள் சரிந்து ரூ.75.70 ஆக குறைந்துள்ளது. இ ப்போரால் வரும் நாட்களில் அத்திவாசியப் பொருகளின் விலை கடுமையாக உயரலாம் என தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்!.