Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண்..

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (09:32 IST)
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சீக்கிய பெண்ணை துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை, அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின்பு அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளனர்.

பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தனது பெண் மதமாற்றப்பட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த தகவலை அறிந்த பெற்றோர் பெரும் மனவேதனை அடைந்தனர். தங்கள் வீட்டுப் பெண்ணை மீட்டு பத்திரமாக வீடு திரும்ப உதவுமாறு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆகியோரிடம் உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் சீக்கிய அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த சீக்கிய பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments