Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் விமானத்தில் பாம்பு - அலறிய பயணிகள்; துணிந்து பிடித்த பெண் [வீடியோ]

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (10:46 IST)
மெக்சிகோவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாம்பு வந்ததை அடுத்து, விமானம் மெக்சிகோ விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ நகரில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்து சென்றுள்ளது. அப்போது, தலைக்கு மேல் இருந்த பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு தொங்கிக் கொண்டு கீழே விழுவதைப் போல் இருந்ததைக் கண்ட பயணிகள் அலறினர்.
 
ஆனால், பெண் ஒருவர் தனது போர்வை மூலமாக பாம்பைப் பிடித்துள்ளார். இது குறித்து மெதினா கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக போர்வை மூலமாக பாம்பு கட்டுக்குள் வந்துவிட்டது. பின்னர், விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், இந்த காட்சியை பார்த்தபோது ஹாலிவுட் நடிகர் நடித்திருந்த ''ஸ்நேக்ஸ் ஆன் எ பிளேன்'' என்ற படத்தின் காட்சியை த்ரில்லாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments