Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்வெளியை நாசம் செய்த இந்தியா: கடுமையாக சாடும் நாசா

Advertiesment
விண்வெளி
, செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (13:32 IST)
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியா விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மோடி அறிவித்தார். 

 
விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 
 
மிஷன் சக்தி என பெயரிடப்பட்ட விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்துவிட்டதாக மோடி தெரிவித்தார். இது இந்தியாவிற்கு பெருமை என கூறினார். 
விண்வெளி
ஆனால், இந்தியாவின் சோதனை மிக மோசமானது இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாதது என நாசா கடுமையான விமர்சங்களை முன்வைத்துள்ளது. இது குறித்து நாசா நிர்வாகி கூறியது பின்வருமாறு, 
 
இந்தியா விண்வெளியில் சோதனை நடத்திய பிறகு சுற்று வட்ட பாதையில் 400 சிதைவு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 60 துண்டுகளை கண்காணித்து வருகிறோம். இந்த சிதைவு துண்டுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான அபாயம் 44% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் டீ எப்படி இருந்துச்சு? மனைவியிடம் என்ன சொன்னார் அபிநந்தன்?