Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம்

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (22:23 IST)
ஜப்பான் நாட்டில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில்  பிரதமர் ஃபுமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நாட்டின் மத்திய பகுதியில் இஷிகவா நகரின் ஹோன்ஷூ தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், இந்த  நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டிடங்கள், லேசாக குலுங்கியதாகவும், இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், கூறப்படுகிறது.

இந்த   நில நடுக்கத்தில் சிக்கி ஒருவர் பலியானதாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments