Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த சில நிமிடங்களில் இந்தோனேஷியா, இந்தியாவில் நிலநடுக்கம். பொதுமக்கள் அச்சம்

Webdunia
திங்கள், 29 மே 2017 (23:19 IST)
இந்தோனேஷியாவில் இன்று இரவு சுமார் 10.30 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.





ரிக்டர் அளவில் 6.6 என்று பதிவாகி இருக்கும் இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் கடுமையாகக் குலுங்கியதாகவும் இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை

இந்தோனேஷியாவை அடுத்து சில நிமிடங்களில் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் இந்த இரு பகுதிகளிலும் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments