Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டினர் அச்சப்பட வேண்டாம், தூதரங்களுக்கு பாதுகாப்பு: தாலிபான்கள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (21:08 IST)
ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர் பயப்படத் தேவையில்லை என்றும் ஆப்கனில் உள்ள தூதரங்கள் அனைத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர் 
 
ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் ஆப்கன் நாட்டிலிருந்து அந்நாட்டு மக்களும் வெளி நாட்டு மக்களும் பிற நாடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம் என்றும் ஆப்கன் நாட்டிலுள்ள வெளிநாட்டவர் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தாலிபான்கள் அறிவிப்பு செய்துள்ளனர் 
 
இருப்பினும் தாலிபான்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டன என்பதும் வெளிநாட்டினர் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments