Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயிரம் வருடங்களுக்கு பின் வரும் அதிசய தினம் இன்று! – அப்படி என்ன ஸ்பெஷல்!

ஆயிரம் வருடங்களுக்கு பின் வரும் அதிசய தினம் இன்று! – அப்படி என்ன ஸ்பெஷல்!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:58 IST)
இன்றைய நாளை உலகம் முழுவதும் பாலிண்ட்ரோம் தினமாக கொண்டாடி வருகின்றனர். இது ஆயிரம் வருடத்திற்கு பின் நிகழும் ஒரு தினமாகும்.

பொதுவாக தேதி, மாதம், வருடம் இவை மூன்றும் குறிப்பிட்ட இலக்கத்தில் இருக்கும்போது நேராகவோ தலைகீழாகவோ படித்தாலும் ஒரே எண்தான் வரும். இதை ஆம்பிக்ராம் என்பார்கள். இந்த ஆம்பிக்ராம் கடந்த 12.02.2021 தேதியில் நிகழ்ந்தது. இதுபோல இரண்டு ஒரே எண்களை கொண்ட தினங்களாக 20.02.2022, 02.02.2022 போன்ற தேதிகளும் வருவதுண்டு.

ஆனால் இரண்டே எண்களை கொண்டு எப்படி படித்தாலும் ஒரே தேதியை குறிப்பிடும் எண்கள் அரிதாகவே நிகழும். இன்று 22.02.2022. இந்த நாளை நடுவே உள்ள புள்ளிகளை நீக்கி, நேராகவோ தலைகீழாகவோ படித்தாலும் அதே தேதி, மாதம், வருடம் வரும். மேலும் இதில் 2,0 ஆகிய இலக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதை பாலிண்ட்ரோம் நாள் என்று அழைக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் 11.01.1011 பாலின்ரோம் தினமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபுல் கலாம் ஆசாத்: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் குறித்து உங்களுக்கு தெரியுமா?