Webdunia - Bharat's app for daily news and videos

Install App

170 பயணிகளோடு நீரில் மூழ்கிய சுற்றுலா படகு: அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (11:24 IST)
கொலம்பியாவில் 170 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஒன்று நீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
கொலம்பியாவில் உள்ள பீநோல் ஏரியில் 170 பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா படகு ஒன்று சென்றது. ஏரியின் நடுவே, படகு திடீரென நீரில் மூழ்க தொடங்கியது. 
 
படகிலிருந்த மக்கள் பயத்தினால் அங்கும் இங்குமாக ஓடியதில் அழுத்தம் மேலும் அதிகமாகி படகு முற்றிலுமாக  மூழ்கியது.
 
இந்த துயர சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், 28 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 99 பேரை மீட்பு குழுவினர்கள் மீட்டதாகவும், 40 பேர் நீந்தி வந்து கரையை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படகு, நீரில் மூழ்கியதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. காணாமல் போன சுற்றுலா பயணிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments