Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலியன்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமா?? துருக்கி தரும் புது ஐடியா!!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:54 IST)
எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளவும், ஏலியன்களிடம் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 
துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது. இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத்தரப்படுமாம். 
 
மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கும் இது உதவுமாம். இன்னும் 10-ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனராம். இந்த படிப்பை குறித்த தேடலின் மூலம் இது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments