Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கை வாங்க பேரம் பேசி வரும் டுவிட்டர்: பரபரப்பு தகவல்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (07:23 IST)
டிக்டாக்கை வாங்க பேரம் பேசி வரும் டுவிட்டர்:
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யாவிட்டால் 15 நாட்களில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்பட ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறது என்பதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டத்தட்ட பேச்சு வார்த்தை முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக் டாக் செயலியை வாங்க டுவிட்டர் நிறுவனம் போட்டியில் குதித்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் டிக் டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இரு நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி வேறு சில அமெரிக்க நிறுவனங்களும் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிப்பதால் அதன் விலையும் அதிகரித்து வருவதாகவும் மிக விரைவில் டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் டுவிட்டர் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments